வயது ஆக ஆக தலைமுடி நரைப்பது இயல்பு. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நரை முடியை மறைக்க பல ஹேர் டைக்கள் சந்தையில் உள்ளன. ஆனால், அவை எதிர்காலத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக, நம் சமையலறையில் உள்ள கருஞ்சீரகத்தை பயன்படுத்தி, எளிய முறையில் இயற்கையான ஹேர் டை தயாரிப்பது எப்படி என்பதை இங்கு காண்போம்.
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கருஞ்சீரக விதைகளை போட்டு நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த பின், சிறிது நெய் சேர்த்து லேசாக கிளறிக்கொள்ளவும். கருஞ்சீரகம் வெந்ததும், அதனுடன் மருதாணி, காபித் தூள், வேப்பிலைத் தூள், நெல்லிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து, அரை கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இந்த கலவையை சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர், கேஸை அணைத்து, கலவையை குளிர்விக்க வைக்கவும். இப்போது தயாரிக்கப்பட்ட இந்த ஹேர் டையை கூந்தலில் தடவலாம். ஹேர் பேக்கை வேர் முதல் நுனி வரை பிரஷ் மூலம் தலையில் தடவி உலர வைக்கவும்.
இதற்குப் பிறகு, இந்த ஹேர் டையை தலைமுடியில் கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து பின்னர் தலையை அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் நரை முடியில் கருமை தெரிய ஆரம்பிக்கும். இந்த ஹேர் டையை மாதம் ஒருமுறை முதல் இரண்டு முறை தடவி வந்தால், நரை முடி கருமை நிறத்தைப் பெறும்.