சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கனிமொழி மேலும் கூறுகையில், தனி மனித ஒழுக்கம் குறித்து முதலில் தனது கட்சியினருக்கு விஜய் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக நிர்வாகியால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி, பொது வாழ்வில் ஈடுபடுவோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என கனிமொழி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.