டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் பயணித்த ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் எறிந்துள்ளனர். இதில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில், கான்பூரிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், ஃபிரோசாபாத் மாவட்டம் மக்கன்பூர் நிலையத்தை நிறுத்தாமல் வேகமாக கடந்து சென்றது. அப்போது, அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலின் E-1 பெட்டியின் கண்ணாடி ஜன்னல் மீது கல் ஒன்று மோதி உடைந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துண்ட்லா சந்திப்பின் வெளிப்பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் மோகன் பகவத் பயணித்த அதே பெட்டியின் மறுபுறத்தில் அவர் அமர்ந்திருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஜிஆர்பி ஆய்வாளர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் ரயில் பயணிகள் மத்தியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதிவேகமாகச் செல்லும் ரயில் மீது கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.