டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் பெரிய அளவிலான போராட்டம் இன்று (ஜூன் 06) காலை நடைபெற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் தங்கி படிக்கும் இந்தியரான அபிஜீத் திப்கே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு நையாண்டி பக்கத்தைத் தொடங்கினார். இந்த பக்கம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து, பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே விஞ்சியது. இதையடுத்து, மத்திய அரசு அந்த பக்கத்திற்கு தடை விதித்தது. இருப்பினும், சமூக வலைதளங்களில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பெயரில் புதிய பக்கங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டன.
இந்த போராட்டத்திற்காக, அமெரிக்காவில் உள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அபிஜீத் திப்கே டெல்லிக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று பேட்டி அளித்தார். நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி CJP சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த நையாண்டி கட்சி, தற்போது தீவிர போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.