சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவர் குறும்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபரால் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், சின்ன போரூரைச் சேர்ந்த பிரைஸ் கிறிஸ்டன் (21) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி நண்பர்களான இவர்களுக்குள் குறும்படம் எடுக்கும்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரைஸ் கிறிஸ்டன், போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி.கள் மூலம் அந்த பெண் உதவி இயக்குனருக்கு தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்படிப்பு முடித்து உதவி இயக்குனராக பணியாற்றி வரும் இளம்பெண்ணுக்கு, தனது கல்லூரி நண்பரே ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.