ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, போஸ் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த ஆண்டு ஜூன் 23 அன்று போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சுமார் ஒரு மாத சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்றது ஸ்ரீகாந்தை மனதளவில் பெரிதும் பாதித்தது. இந்த வழக்கின் காரணமாக ஏற்பட்ட குற்ற உணர்வு மற்றும் பயம் காரணமாக, அவர் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது, நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வருகிறார்.
பாங்காக்கில் குடும்பத்துடன் கழிக்கும் இந்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை நடிகர் ஸ்ரீகாந்த் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த பயணம் அவருக்கு மன அமைதியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
