நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 47 இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 65 இளைஞர்களும் தங்களது பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்டது பெருமைக்குரிய விஷயமாகும்.
சென்னை, ஐசிஎஃப் (ICF) ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்ற இந்த 'ரோஸ்கார் மேளா' (Rozgar Mela) நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இங்கு பணி நியமனம் பெற்ற இளைஞர்கள், ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, தெற்கு ரயில்வே, பாரத வங்கி, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு முக்கிய அரசுத் துறைகளில் சேவையாற்ற உள்ளார்கள்.
இது வெறும் பணி நியமனக் கடிதம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு இளைஞரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகுந்த அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க, நாட்டுக்கு நீங்கள் ஆற்றும் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்!