புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் இந்த வாரம், கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையவுள்ளது. ராசியில் உள்ள குருவிற்கு செவ்வாயின் நான்காம் பார்வை கிடைப்பதால், குருமங்கள யோகம் உண்டாகிறது. இது ராசிக்கு மிகுந்த சாதகமான கிரக நிலைகளை ஏற்படுத்துகிறது.
லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், அனைத்து விதமான ஜாதக குறைபாடுகளும் நீங்கும். இதனால், கடக ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பல சவாலான சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகி, கடன் சுமை குறையும்.
பேச்சுத் திறமையால் சாதுர்யமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். அன்றாடப் பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை மாறி, நல்ல லாபம் கிட்டும். வருவாய் அதிகரிக்கும், சேமிக்கும் அளவுக்கு பணம் வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. எதிரிகளை வீழ்த்தும் வல்லமையும் உண்டாகும்.
இருப்பினும், 9.6.2026 அன்று அதிகாலை 3.36 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால், இந்த நேரத்தில் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். எனவே, பிரதோஷ நாளன்று நந்திக்கு பால் அபிஷேகம் செய்வது நன்மை தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406.